முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெரினா கடற்கரையை ரூ.47 கோடியில் அழகுப்படுத்தும் பணி தொடங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மெரினா கடற்கரையை ரூ.47 கோடி செலவில் அழகுப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஐகோர்ட்டு அறிவுறுத்தலின்படி சென்னை மெரினா கடற்கரையில், 900 ஸ்மார்ட் கடைகள் சென்னை மாநகராட்சியால் நிறுவப்பட்டுள்ளன. 

மெரினா கடற்கரையில் ஏற்கனவே வியாபாரம் நடத்தி வரும், பெருநகர சென்னை மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்டவர்களை அ என்ற அடிப்படையில் 60 சதவீதம் கடைகள் என 540 கடைகளும், புதிய கடைகள் நடத்த விருப்பம் உள்ளவர்களுக்கு ஆ என்ற அடிப்படையில் 40 சதவீதம் கடைகள் என 360 கடைகளும் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதில் முதற்கட்டமாக 52 ஸ்மார்ட் கடைகள் மெரினா கலங்கரை விளக்கம் அருகே நிறுவப்பட்டுள்ளது. இதனை கடந்த 9 ஆம் தேதி நேரில் ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கொரோனா ஊரடங்கு முடிந்ததும் அனைத்து ஸ்மார்ட் கடைகளும் நிறுவப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து