முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தவே விரும்பம்: இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

ஜெனீவா : பாகிஸ்தான் உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவை ஏற்படுத்தவே விரும்புவதாக ஐ.நா.வில் இந்தியா தெரிவித்துள்ளது.மேலும், நல்லுறவுக்கான சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானுக்கே உள்ளதாகவும் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கடந்த ஆண்டு செயல்பாடுகள் குறித்து ஐ.நா. பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்பட்டது. அதில் ஐ.நா.வுக்கான இந்திய தூதுக் குழுவைச் சேர்ந்த அதிகாரி ஆர்.மதுசூதன் கூறியதாவது:

பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் இயல்பான நல்லுறவை ஏற்படுத்துவதற்கு இந்தியா விரும்புகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதற்கு இருதரப்பு சார்பிலும் பேச்சுவார்த்தை மூலமாக அமைதியான வழியில் தீர்வு காணப்பட வேண்டும்.

அத்தகைய நிலையை அடைவதற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத சூழலும், வன்முறையற்ற சூழலும் அவசியம். அத்தகைய சூழலை ஏற்படுத்தும் பொறுப்பு பாகிஸ்தானிடமே உள்ளது. இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடுவதற்கு அந்நாட்டு அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகள் மீது அந்நாட்டு அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஜம்மு-காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டைச் சேர்ந்தது. அது தொடர்பாக ஐ.நா. பொதுச் சபையில் பேசி, சபையின் மதிப்பை சீர்குலைக்க பாகிஸ்தான் மீண்டும் முயற்சித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி உலக நாடுகளை ஏமாற்ற முயற்சிக்கும் பாகிஸ்தானின் முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.

சீர்திருத்தங்கள் அவசியம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கவுன்சில் செயல்படும் விதம் தன்னிச்சையாக உள்ளது. கவுன்சிலின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஐ.நா. பொதுச் சபையால் வெளியிடப்படும் அறிக்கைகள் மீது பாதுகாப்பு கவுன்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆண்டறிக்கையில் கூடுதல் விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். உலகளவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக பாதுகாப்பு கவுன்சில் மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் அந்த அறிக்கையில் இடம்பெற வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இடம்பெறாத நாடுகளில் இருந்தே அமைதி நடவடிக்கைகளுக்கு அதிக வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனவே, அந்த நாடுகளுக்கும், பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளுக்கும் இடையே கூடுதல் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதும் அவசியமாக உள்ளது என்றார் அவர். முன்னதாக, இந்த விவாதத்தில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் முனீர் அகரம், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து