முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் பா.ஜ.க.வில் இணைந்தார்

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தெலுங்கானா மாநில முன்னாள் அமைச்சரும், தெலுங்கானா ராஷ்டிர சமீதி கட்சியின் மூத்த தலைவருமான ஈடல ராஜேந்தர் நேற்று  பா.ஜ.க.வில் இணைந்தார்.

தெலுங்கானா தனி மாநிலப் போராட்டத்தில் நீண்ட ஆண்டுகளாக முதல்வர் சந்திரசேகர ராவுடன் பங்கேற்று வந்தவர் ஈடல ராஜேந்தர். பின்னர் தெலுங்கானா மாநிலம் உருவானதும், டி.ஆர்.எஸ். கட்சியில் இவரின் பங்கு முக்கிய மாக கருதப்பட்டது.

தொடர்ந்து 2 முறை ஆட்சியை பிடித்த தெலுங்கானா ராஷ்டிர சமீதி கட்சியில், முதலில் நிதி அமைச்சராகவும், இரண்டாவது முறையாக சுகாதார துறை அமைச்சராகவும் ராஜேந்தர் பதவி வகித்தார். இவர் மீது நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முதல்வர் சந்திரசேகர ராவ் பகிரங்க விசாரணைக்கு உத்தரவிட்டார். அமைச்சர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

இதனால், முதல்வருக்கும், ஈடல ராஜேந்தருக்கும் இடையே மோதல் வெடித்தது. டெல்லி சென்று பா.ஜ.க.வை சேர்ந்த சில மூத்த நிர்வாகிகளையும், மத்திய அமைச்சர்களையும் ஈடல ராஜேந்தர் சந்தித்து விட்டு வந்தார். நேற்று முன்தினம் தனது எம்.எல்.ஏ. பதவியையும் இவர் ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா ஹுஜாராபாத் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தநிலையில் ஈடல ராஜேந்தர் பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஈடல ராஜேந்தர் பா.ஜ.க.வில் இணைந்தார். அப்போது மத்திய அமைச்சர் கிஷோர் ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து