முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ. 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் இன்று முதல் விநியோகம் : இந்த மாத இறுதி வரை ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா நிவாரண நிதியின் 2-வது தவணை மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களை இம்மாத இறுதி வரையில் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 14 வகை மளிகைப் பொருட்கள் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் 2-வது தவணை கொரோனா நிதி இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படவுள்ளது. இதற்கான டோக்கன்கள் கடந்த 11-ம் தேதி முதல் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டன.

இந்த நிலையில், இன்று முதல் இம்மாத இறுதி வரையில் நிவாரண நிதியை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரத்தின் படி பொதுமக்கள் அவசரமின்றி நிவாரண நிதியையும், மளிகைப் பொருள் தொகுப்பையும் பெற்றுச் செல்லலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து