முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்கள் மற்றும் வரலாற்று நினைவு சின்னங்களுக்கு நாளை முதல் அனுமதி

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்களுக்கு நாளை முதல் அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, சுற்றுலாத்தலங்கள் அருங்காட்சியங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் தரளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், மத்திய அரசின் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை நாளை முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து