முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் 30-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

வெள்ளிக்கிழமை, 18 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : ஆந்திரத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தை கூடுதல் தளர்வுகளுடன் வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த நிலையில் ஆந்திரத்தில் மே 5-ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.  பொதுமுடக்கத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதையொட்டி, தளர்வுகள் குறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதையடுத்து, ஆலோசனைக்கு பிறகு கூடுதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திரத்தில் காலை 6 மணிமுதல் மாலை 5 வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கிழக்கு கோத்தாவரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் அந்த மாவட்டத்தில் மட்டும் கடை திறக்கும் நேரத்தை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை குறைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து