முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் தினமும் 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கவுகாத்தி : அசாமில் இன்று முதல் ஜூன் 30 வரை தினந்தோறும் 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்துள்ளார். 

இது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சா்மா கவுகாத்தியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மாநிலத்தில் ஜூன் 21 (இன்று) முதல் ஜூன் 30 வரை தினந்தோறும் 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் அரசுப் பணிகள் எதுவும் நடைபெறாது. 

ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் தடுப்பூசி திட்டத்தில் கவனம் செலுத்தும். அடுத்த 10 நாள்களுக்கு தினந்தோறும் 2.80 லட்சம் முதல் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிந்தால், ஜூலை மாதத்திலும் அசாம் மாநிலத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும். ஏற்கெனவே மாநிலத்தில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். 

மேலும் இந்த மாதத்திற்குள் தடுப்பூசி போடுமாறு ஊழியர்களைக் கேட்டுக் கொண்டார். பிற அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள் தொழிலாளர்கள், மக்களை ஊக்குவிக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து