முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை கூட்டத் தொடர் 24-ம் தேதி வரை நடைபெறும் : அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு

திங்கட்கிழமை, 21 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சட்டசபை கூட்டத் தொடர்  24-ம் தேதி வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

16 -வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.

சட்டசபை தோதலுக்கு பிறகு நடைபெறும் புதிய சபையின் முதல் கூட்டத்தொடர் என்பதால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி தொடங்கி வைத்துள்ளார். கவர்னர் உரை நிறைவடைந்ததும், சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில், இன்று முதல் பேரவைக் கூட்டம் தொடா்ந்து நடைபெறும். வரும் வியாழக்கிழமை வரை கூட்டத் தொடா் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, ஜூன் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் உரையின் மீதான விவாதம் நடைபெறும். பிறகு, ஜூன் 24-ஆம் தேதி கவர்னர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலுரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து