முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா 3-வது அலை அச்சம்: மத்திய அரசுக்கு ராகுல் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 22 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா தொடர்பான வெள்ளை அறிக்கையை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி நேற்று வெளியிட்டு காணொலி மூலமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள நாட்டிற்கு உதவுவதற்காகவே, வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. 3-வது அலை வரும் என நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். முதல் மற்றும் இரண்டாவது அலையில் தோல்வி அடைந்தது போல் அல்லாமல், மத்திய அரசு மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும். மத்திய அரசின் தவறுகளை அரசு திருத்திக் கொள்ளவே வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளேன். 

வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைவதால், 3-வது அலையை தொடர்ந்து மேலும் பல அலைகள் வரும் என நான் கூறுகிறேன். இந்த நேரத்தில் தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியம். தடுப்பூசி போடும் திட்டத்தை வேகப்படுத்துவதுடன், அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். 

மூன்றாவது அலை நிச்சயம் என்ற நிலையில், அதை எதிர்கொள்ள தேவையான மருந்துகள், ஆக்சிஜன் படுக்கைகள், மருத்துவமனைகள் போன்றவற்றை தயார் செய்ய வேண்டும். முதல் மற்றும் இரண்டாவது அலையில் செய்த தவறுகளை அரசு மீண்டும் செய்து விடக்கூடாது. நேற்று அதிக அளவில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பாராட்டுக்குரியது. இது அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வரை தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து