முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகஸ்டில் ஜே.இ.இ. மெயின் தேர்வுகள்: செப்டம்பர் மாதத்திற்கு நீட் தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு

புதன்கிழமை, 23 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வுகள் ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாதத்திலோ நடத்தப்படும் என்றும், நீட் தேர்வுகள் செப்டம்பர் மாதம் வரை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாட்டில் கொரோனா வைரஸ் 2-வது அலை ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தை அடைந்தது. நாள்தோறும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். தினந்தோறும் 3 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்புத் தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டன. சி.ஐ.எஸ்.சி.இ. வாரியமும் 10-ம் மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்தது. முதுகலை நீட் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. 

அதே போல ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருந்த ஜே.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. நுழைவுத்தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும், தேர்வு நடத்தப்படுவதற்கு 15 நாட்கள் முன்பாகத் தேதிகள் அறிவிக்கப்படும் என தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்தது. வழக்கமாக ஆண்டுதோறும் 4 முறை ஜே.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

ஒரு மாணவர் 4 தேர்வுகளையும் எழுதலாம். அதில் பெறும் அதிகபட்ச மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஜே.இ.இ. மெயின் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருந்த தேர்வுத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

அதே போல ஜூலை 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஜே.இ.இ. அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.  அதேபோல ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நீட் நுழைவுத்தேர்வு குறித்து அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை. இதற்காக மே 1-ம் தேதி தொடங்கப்பட வேண்டியிருந்த முன்பதிவும் தொடங்கப்படவில்லை. மத்தியப் பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு குறித்தும் மத்திய அமைச்சகம் இதுவரை எதுவும் கூறவில்லை.

மத்தியக் கல்வி அமைச்சக தரப்பில், மீதமுள்ள இரண்டு ஜே.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வுகள் ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாதத்திலோ 15 நாட்கள் இடைவெளியில் நடத்தப்படும். நீட் தேர்வுகள் செப்டம்பர் மாதம் வரை தள்ளிப்போக வாய்ப்புண்டு. எனினும் இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சகமே இறுதி முடிவை எடுக்க வேண்டும். தற்போது நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா சூழல் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து