எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி : பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரியின் அனைத்து பெட்ரோல் நிலையங்கள் முன்பும் திரண்டுவந்த காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக 10 நாட்களுக்குத் தொடர்ந்து, கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரியில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் கண்டித்து, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து பெட்ரோல் பங்க் முன்பும் கையெழுத்து இயக்கம் 7-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுச்சேரி முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு இன்று (ஜூலை 7) காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்பூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி சைக்கிள் ஓட்டிவந்து பங்கேற்று தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். இதில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்ரமணியம், மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து பெட்ரோல் பங்க்கில் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி பொதுமக்களிடம், மத்திய அரசுக்கு எதிராகக் கையெழுத்து பெற்றனர்.
பின்னர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து விண்ணைத் தொட்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.35, டீசல் விலை ரூ.93. சமையல் எரிவாயு விலை ரூ.850 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.65, டீசல் விலை ரூ.53, சமையல் எரிவாயு ரூ.350க்கு கொடுக்கப்பட்டது. அப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 130 டாலர் இருந்தது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் உலக சந்தையில் 70 டாலராக உள்ளது.
ஆனாலும், மோடி தலைமையிலான அரசில் பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தாண்டிவிட்டது. தேர்தல் சமயத்தில் சதம் அடிக்கும் என்று நாங்கள் கூறினோம். அது தற்போது நடந்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சியின்போது 17 பைசா பெட்ரோல் கட்டணம் உயர்ந்தபோது, கண்டனம் தெரிவித்து பாஜக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போராட்டம் நடத்தினார்.
ஆனால், தற்போது பாஜக ஆட்சியில் கடந்த 6 மாதத்தில் 93 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 16 முறை விலை உயர்வு நடைபெற்றுள்ளது. கரோனா காலத்தில் கடைகள் மூடல், வேலையில்லாத் திண்டாட்டம் உள்ள இந்நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மிகப்பெரிய அளவில் மக்களை பாதித்துள்ளது. இல்லத்தரசிகளையும் பாதித்துள்ளது.
இந்த விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தி இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை தொடர் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மோடி தலைமையிலான மத்திய அரசைக் குறை கூறுகின்றனர். மத்திய அரசு தவறான கொள்கையில் இருக்கின்றனர் என்கின்றனர்.
எனவே மோடி அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடர் போராட்டமாக இருக்கும். தற்போதைய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, காங்கிரஸ் ஆட்சியின்போது பெட்ரோல், டீசல், சமையல் விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.
தற்போது, பெட்ரோல் விலை உயர்வுக்கு அவர் என்ன பதில் கூறுவார் எனத் தெரியவில்லை. புதிதாகப் பொறுப்பேற்ற அமைச்சர்களில் யாருக்கு எந்த இலாகா என்பது தெரியாமல் உள்ளனர். அலுவலகம் வந்து கண்ணைக் கட்டிவிட்டது போல் அமர்ந்திருக்கின்றனர். பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நம்பிக்கை கிடையாது. இலாகாவை ஒரே நாளில் பிரித்துக்கொடுக்கலாம்.
பாஜக முக்கிய இலாகாவைக் கேட்பதால் காலதாமதம் ஏற்படுவதாக கூறுகின்றனர். அது அவர்களின் உட்கட்சி விவகாரம். ஆனால், ஒட்டுமொத்தமாகப் புதுச்சேரி மாநிலத்தின் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. ஒரு பக்கம் ஆளுநர் ஆளுகிறார். முதல்வர் அலுவலகம் வந்து செல்கிறார். அவரால் ஒன்றும் செய்ய முடியுவில்லை.
கரோனா நிவாரணம் ரூ.3,000 அறிவிக்கப்பட்டு, ரூ.1,500க்கு மேல் கொடுக்க முடியவில்லை. நிதிப் பற்றாக்குறை உள்ளது. தமிழகத்தில் அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், புதுச்சேரியில் ஒரு பணியும் நடைபெறவில்லை. எந்தத் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், அமைச்சர்கள் சட்டப்பேரவைக்கு வந்து உட்கார்ந்துவிட்டுச் செல்வது மட்டுமே நடக்கிறது.
அமைச்சரவை அமைத்து 2 மாதங்கள் ஆகும் நிலையில் இலாகாக்கள் பிரிக்காதது கூட்டணிக்கே மிகப்பெரிய அவப்பெயர். ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய கேள்விக்குறி. ஆகவே, உடனே அமைச்சர்களுக்கு இலாகாக்களை அறிவித்து போர்க்கால அடிப்படையில் மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.’’
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.