முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சி.பி.ஐ. கட்டிடத்தில் திடீர் புகை; ஊழியர்கள் பதறியடித்து ஓட்டம்

வியாழக்கிழமை, 8 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: டெல்லியில் மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.) அமைப்பின் கட்டிடம் அமைந்துள்ளது. இதில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு குறிப்பிட்ட அளவிலான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில் இந்த கட்டிடத்தில் திடீரென நேற்று புகை கசிந்தது. இதனால், அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் பதறியடித்து வெளியே ஓடி வந்தனர். அந்த கட்டிடத்தில் இருந்த ஜெனரேட்டரில் மின் கசிவு ஏற்பட்டதில் புகை வெளியேறி உள்ளது என தெரிய வந்துள்ளது. 

இதனால் தீ விபத்து அல்லது பொருட்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. கட்டிட சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்  இயல்பு நிலை திரும்பும் என சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து