முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசியாவில் ஊரடங்கால் சிரமப்படும் மக்கள் காட்டும் வெள்ளை கொடி

வியாழக்கிழமை, 8 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கோலாலம்பூர்: மலேசியாவில் கரோனா ஊரடங்கால் சிரமப்படுவோர் உதவி கோரி தங்கள் வீட்டுக்கு வெளியே வெள்ளைக் கொடி வைக்கின்றனர்.

தென்கிழக்கு ஆசியாவில் கரோனா வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் 3-வது இடத்தில் மலேசியா உள்ளது. கரோனா தொற்றை கட்டுப்படுத்தஇங்கு கடந்த ஜூன் 1 முதல் ஊரடங்குகட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்நிலையில் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகில் உள்ள செலங்கர் மாநிலம், பெட்டாலிங் ஜயா மாவட்டத்தை சேர்ந்த ஹதீஜா நீமத் என்ற பெண்மணி, ஊரடங்கு நெருக்கடியை சமாளிக்க முடியாமல், வெளி நபர்களிடம் உதவி கேட்டு, தனது வீட்டு ஜன்னலுக்கு வெளியே வெள்ளைத் துணி ஒன்றை பறக்கவிட்டார். இதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் சிறிது நேரத்திலேயே ஹதீஜாவுக்கு உணவும் பிற பொருட்களும் கொடுத்து உதவினார்.

இதன் தொடர்ச்சியாக, உணவு, மருந்துஉள்ளிட்ட அவசரத் தேவை உடையவர்கள் தங்கள் வீட்டுக்கு வெளியே வெள்ளைக் கொடி வைக்கும்படி சமூக ஊடகங்களில் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் இந்த வீடுகளை அடையாளம் கண்டு உதவும்படியும் கோரிக்கை வைக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் வேகம் அடைந்த இந்த வெள்ளைக் கொடி பிரச்சாரத்தின் பலனாக, துயரத்தில் இருப்பவர்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கும் தன்னார்வலர்களும் உதவுகின்றனர். தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலரும் இதற்கு நன்கொடை வழங்குகின்றனர்.

இதற்கு தொடக்கப் புள்ளியாக இருந்த ஹதீஜா நீமத் கூறும்போது, “அன்று எனது வெள்ளைக் கொடி அழைப்பை ஏற்று வெளியாட்கள் தான் உதவிக்கு வந்துள்ளார்கள் என நான் நினைத்தேன். ஆனால் அருகில் வசிப்பவர்களே உதவிக்கு வந்தனர். ஒருவர் வெள்ளைக் கொடியை வைக்கும்போது, அதை நாம் கவனத்தில் கொள்வது அவசியம் என்று கூறிய அவர்கள், தாராள உதவிகளால் எங்களை வியப்பில் ஆழ்த்தினர்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து