முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரக்கன்று நட்டு சுற்றுச்சூழல் மந்திரியாக பொறுப்பேற்றார் பூபேந்திர யாதவ்

வியாழக்கிழமை, 8 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக நேற்று முன் தினம் மந்திரிசபை மாற்றி அமைக்கப்பட்டது. புதிய மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். 

பிரதமர் மோடி முன்னிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 7 பெண்கள் உள்பட 43 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். பின்னர் அவர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 

இந்நிலையில், புதிதாக பதவியேற்ற மந்திரிகள் நேற்று டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டனர். பா.ஜ.க. தலைவர் பூபேந்திர யாதவுக்கு சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் நேற்று மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றினார். அதன்பின்னர் அலுவலகத்திற்கு சென்று பொறுப்பேற்று கோப்பில் கையெழுத்திட்டார். 

தனக்கு இந்த பொறுப்பை ஒப்படைத்த பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக பூபேந்திர யாதவ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து