முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது அரியானா முதல்வர் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 8 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

சண்டிகர்: விவசாயிகளின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அரியானா முதல்வர் கட்டார் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி எல்லைகளில், மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக அவர்களது போராட்டம் நீடித்து வருகிறது.   அரசுக்கும், விவசாயிகளுக்கும் இதுவரை நடைபெற்ற அனைத்துகட்ட பேச்சுவார்த்தைகளிலும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாரதீய கிசான் யூனியன் என்ற  விவசாய அமைப்பின் தலைவர் குர்ணம் சிங் செய்தியாளர்களிடம் கூறும் போது, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், பஞ்சாப் தேர்தலில் போட்டியிட வேண்டும் என கூறினார்.  இது விவசாயிகளிடையே சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.  விவசாயிகளின் போராட்டம் திசை திரும்பி செல்லும் சூழலும் காணப்படுகிறது.  இதனால், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் தொடங்கிய விவசாயிகள் அரசியலில் நுழைய கூடிய சாத்தியமும் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் அரசியல் உள்நோக்கங்களை கொண்டது என அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, பஞ்சாப் மக்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என குர்ணம் சிங் சாதுனி கூறுகிறார்.  விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னால் அரசியல் உள்ளது என நாங்களும் கூறி வருகிறோம்.  தொடர்ந்து நடந்து வரும் போராட்டமானது, அரசியலில் ஈர்ப்புகளை உருவாக்கி வருகிறது.  அவர் விவசாயிகளை பற்றி கவனத்தில் கொள்ளவில்லை என்று கட்டார் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து