முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கரில் ஐ.பி.எஸ். அதிகாரி மீது தேசதுரோக வழக்குப்பதிவு

சனிக்கிழமை, 10 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

 ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சத்தீஸ்கரில் ஜி.பி. சிங் என்ற ஐ.பி.எஸ் அதிகாரி முறைகேடாக சொத்து சேர்த்ததாக, ஊழல் தடுப்பு பிரிவு மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதன் அடிப்படையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மூலம், அவர் அரசுக்கு எதிராகவும், மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராகவும் சதி செயலில் ஈடுபட்டது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதன் அடிப்படையில், அவர் மீது ஐ.பி.சி 124-ஏ (தேச துரோக வழக்கு) மற்றும் 153 -ஏ (மதம், மொழி அடிப்படையில் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல் ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து