முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் சந்திப்பு

சனிக்கிழமை, 10 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். 

 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் காலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து பிரதமர் மோடியை அவரது வீட்டில் தமிழக கவர்னர் சந்தித்தார். நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்ற  தமிழக கவர்னர்  பன்வாரிலால் புரோகித் டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். நேற்று காலை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு நேரடியாக சென்ற பன்வாரிலால் ஜனாதிபதியுடன் தமிழகத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து சுமார் அரை மணி நேரம் பேசினார்.   

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து தமிழக கவர்னராக இருந்து வருகிறார். அவருடைய பதவி காலம் விரைவில் முடிவடைய உள்ளது. எனவே அவரும் மாற்றப்படுவார். புதிய கவர்னர் நியமிக்கப்படுவார் என்ற செய்திகள் வெளியானது. இந்நிலையில் நேற்று பிரதமர் மோடியுடனான அவரது சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து