முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர்களுடன் நடிகை குஷ்பு சந்திப்பு

வியாழக்கிழமை, 15 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: மத்திய அமைச்சர்களுடன் நடிகை குஷ்பு சந்தித்து பேச்சு நடத்தினார். 

பா.ஜ.க.வில் சேர்ந்த நடிகை குஷ்பு கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் நட்சத்திர வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அவருக்கு பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.  இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள குஷ்பு கடந்த 2 நாட்களாக அங்கு முகாமிட்டுள்ளார். புதிதாக அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட எல்.முருகன், கி‌ஷன்ரெட்டி ஆகியோரை குஷ்பு சந்தித்து வாழ்த்து கூறினார். மேலும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இராணி ஆகியோரையும் சந்தித்து பேசினார். 

இது குறித்து நடிகை குஷ்பு கூறுகையில், மரியாதை நிமித்தமான சந்திப்புதான். மாநிலத் தலைவர் முருகன் தலைமையில்தான் கட்சிக்கு வந்தேன். அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி.  மேலும் கி‌ஷன்ரெட்டி எனக்கு தேர்தலில் பிரசாரம் செய்து பணியாற்றியவர். அவருக்கும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. எனவே மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து சொல்லவே டெல்லி சென்றேன். வேறு எந்த விசே‌ஷமும் இல்லை என்றார்.  ஆனால் அவர் டெல்லியிலேயே தொடர்ந்து முகாமிட்டு இருப்பதால் கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து