முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் தேசத் துரோக சட்டத்தை இன்னமும் கடைபிடிப்பது ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

வியாழக்கிழமை, 15 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் தேசத்துரோக சட்டத்தை கடைப்பிடிப்பது ஏன்? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் ல் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஓய்வு பெற்ற மேஜர் எஸ்.ஜி.ஓம்பட்கேர் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தேசத்துரோக வழக்குகளைப் பதிவு செய்ய வழிவகுக்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124ஏ-வை ரத்து செய்யக் கோரி கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்  நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர். ஆங்கிலேயர் காலத்தில் இந்தியர்களை ஒடுக்க கொண்டு வரப்பட்ட தேசதுரோக வழக்கிற்கான சட்டப்பிரிவு தற்போது தேவையா? நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் தேசத்துரோக சட்டத்தை கடைப்பிடிப்பது ஏன்?  மகாத்மா காந்தி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை ஒடுக்க பயன்படுத்தப்பட்ட தேச துரோக சட்டம், விடுதலை பெற்ற பின்னரும் தேவைப்படுகிறதா? 

தேச துரோக வழக்கு என்பது ஒரு தச்சரிடம் மரத்தை வெட்ட கொடுக்கப்பட்ட ரம்பம் போன்றது.அந்த ரம்பத்தை கொண்டு ஒட்டுமொத்த காட்டையும் தற்போது அழிப்பது போன்று உள்ளது. விசாரணை அமைப்புகளால் தேச துரோக சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அது வேதனை அளிக்கிறது.  இந்த சட்டம் மத்திய  அரசுக்கு குரல் கொடுக்கும்  எதிர்க்கட்சிகள் மீதும் அப்பாவி மக்கள் மீதும் தவறாக பயன்படுத்தப்படுகிறது.இதற்கு போலீஸ் அதிகாரிகள் பொறுப்பேற்பதில்லை.  தேச துரோக வழக்கில் தண்டனை பெறுபவர்களை பார்த்தால் அதன் எண்ணிக்கை மிக மிக குறைவு.  இந்த வழக்கு தொடர்பாக மத்திய  அரசு பதிலளிக்க உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து