முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியின் உருவத்தை போல உண்டியல் செய்த சிற்பி

வெள்ளிக்கிழமை, 16 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பாட்னா : பீகார் மாநிலத்தை சேர்ந்த சிற்பி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை போல உண்டியல் செய்துள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் ஒரு சிற்பி. இவர் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை போல உண்டியல் செய்துள்ளார். 

இதுகுறித்து சிற்பி பிரகாஷ் கூறுகையில் , பிரதமர் மோடி நாட்டை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக உணர்ந்தேன். எனவே பணத்தை மிச்சப்படுத்த இதை செய்ய முடிவு செய்தேன். மேலும் இந்த உண்டியலில் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள பணத்தை நாணயமாக அல்லது தாளாக சேமிக்க முடியும் இந்த உண்டியல் செய்ய ஒரு மாதம் பிடித்தது என்று அவர் தெரிவித்தார். 

இதை தயாரித்தவுடன் நான் அதை சந்தையில் விற்க ஆரம்பித்தேன். உலகை சிறந்தவரான நமது பிரதமரை பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்கவும் இது பயன்படுத்தப்படலாம் என்றும், எனக்கு இதுவரை எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை என்றும் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.  அந்த உண்டியலில் உலகிலேயே தலை சிறந்த பிரதமர் என்ற வாசகத்தையும் அவர் எழுதியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து