முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு

சனிக்கிழமை, 17 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். 

டெல்லியில் பிரதமர் மோடியுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி பதவிக்கு சரத்பவாரை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட சரத்பவாருக்கு திட்டம் இல்லை என தேசியவாத காங்கிரசும் மறுத்திருந்த நிலையில், தற்போது பிரதமருடனான சந்திப்பு நிகழ்ந்துள்ளது.  இதனிடையே, சமீபத்தில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை இரண்டு முறை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரதமர் மோடியுடனான சந்திப்பில் இருவருக்கும் இடையே அரசியல் குறித்து  விவாதிக்கப்படவில்லை என்று சரத்பவார் கூறி உள்ளார்.  மேலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முன்பு பிரதமர் மோடியுடன் இந்தியாவில் கொரோனா நிலைமை குறித்தும் விவாதித்ததாக சரத் பவார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சரத்பவார் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில், பிரதமர் மோடியுடனான சந்திப்பில்   தேசிய நலனுக்கான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக  கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து