முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

65 கோடி கூடுதல் தடுப்பூசிகள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்பந்தம் : கோவிஷீல்டு ரூ. 205 - கோவாக்சின் ரூ. 215 விலை உயர்வு

சனிக்கிழமை, 17 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டிசம்பர் மாதம் வரை கூடுதலாக 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

டிசம்பர் மாதம் வரை சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை பெற மத்திய அரசு ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. கொள்முதல் செய்யும் தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு வழங்க மத்திய முடிவு செய்து இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் சீரம் நிறுவனத்திடம் 37 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளும், பாரத் பயோடெக்கிடம் 28.8 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை பெற மத்திய அரசு முடிவு செய்து ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி கொள்முதல் விலை ரூ. 205 ஆகவும், கோவாக்சின் கொள்முதல் விலை ரூ. 215 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலை உயர்வு தடுப்பூசி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி கொள்முதல் விலை ரூ. 205 ஆகவும், கோவாக்சின் கொள்முதல் விலை ரூ. 215 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 2 தடுப்பூசிகளும் தலா ரூ. 150-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து