முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களிடம் 2.74 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்

சனிக்கிழமை, 17 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 2.74 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதில் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த 21-ம் தேதி அமல்படுத்திய மத்திய அரசு, இந்த பணிகளை மேலும் முடுக்கி விட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 2.74 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், 

காலை 8 மணி வரையிலான நிலவரப்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 41 கோடியே 69 லட்சத்து 24 ஆயிரத்து 550 கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதில், 38,94,87,442 கொரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது. 

தற்போது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் 2,74,37,108 தடுப்பூசிகள் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 42,12,557 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து