முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் பாராளுமன்ற குழு மாற்றி அமைப்பு: சோனியா காந்தி நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்  இன்று தொடங்க உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கட்சியின் பாராளுமன்றக் குழுவை மாற்றி அமைத்துள்ளார். இரு அவைகளின் வசதிக்காகவும், சிறப்பான முறையில் செயல்படுவதை உறுதி செய்யவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

காங்கிரஸ் கட்சியின் தலைவரான நான், பாராளுமன்றத்தின் இருஅவைகளிலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிறப்பாகவும், திறமையாகச் செயல்படுவதை உறுதி செய்ய நிர்வாக ரீதியான மாற்றங்கள் செய்யதுள்ளேன். இந்த குழு நாள்தோறும் கூடி, அலுவல் தொடர்பாக விவாதிக்கும், அதுமட்டுமல்லாமல் பாராளுமன்றத்தில் முக்கிய விவாதங்கள் நடக்கும் முன்பாகவும், கூட்டத்தொடர் இடையேயும் கூடி விவாதித்து முடிவு எடுப்பார்கள். தேவைப்பட்டால் இரு குழுவினரும் இணைந்து கூட்டம் கூடி ஆலோசிப்பார்கள். இரு குழுவையும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூட்டி ஆலோசனை நடத்துவார். இதன்படி மக்களவைத் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தொடர்கிறார், துணைத் தலைவராக கவுரவ் கோகய் செயல்படுவார். மக்களவையின் தலைமைக் கொறாடாவாக கே. சுரேஷ் செயல்படுவார். ரவ்னீத் சிங் பிட்டு, மாணிக்கம் தாகூர் ஆகியோர் மக்களையின் கொறாடாக்களாக இருப்பார்கள். காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி, டாக்டர் சசி தரூர் ஆகியோர் கொறாடா குழுவில் இடம் பெறுவர். 

மாநிலங்களவையின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே செயல்படுவார், துணைத் தலைவராக ஆனந்த் சர்மா இருப்பார். மாநிலங்களவையின் தலைமைக் கொறாடாவாக ஜெய்ராம் ரமேஷும், கொறாடா குழுவில் அம்பிகா சோனி, ப. சிதம்பரம், திக்விஜய் சிங், கே.சி.வேணுகோபால் ஆகியோர் இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து