முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடத்த அரசு தயார்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: பாராளுமன்றத்தில்ஆரோக்கியமான விவாதங்கள் நடத்துவதற்கு அரசு தயாராக இருக்கிறது, எதிர்க்கட்சிகளிடம் இருந்து ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். 

பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது, ஆகஸ்ட் 13-ம் தேதி வரை கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தை சுமூகமாக நடத்தும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்தக்கூட்டத்தில் 33 கட்சிகளைச் சேர்ந்த 40 தலைவர்கள் பங்கேற்றனர். 

பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சரும், மாநிலங்களவை ஆளும்கட்சித் தலைவருமான பியூஷ்கோயல், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரையன், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. சதீஸ் மிஸ்ரா, அப்னா தளம் தலைவர் அனுப்ரியா படேல், லோக்ஜனசக்தி தலைவர் பசுபதி பராஸ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது குறித்து பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது, 

பாராளுமன்றத்தில் பல்வேறு விவகாரங்கள், பிரச்சினைகள் குறித்து விதிமுறைப்படி, நடைமுறையின்படி ஆரோக்கியமான,அர்த்துள்ள விவாதங்களை நடத்த அரசு தயாராக இருக்கிறது என்று அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.  அனைத்து தரப்பின் ஆலோசனைகள், குறிப்பாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள், அறிவுரைகள் வரவேற்கப்படுகிறது, அது சரியாக இருந்தால் பரிசீலிக்கப்படும். பாராளுமன்ற விதிகளுக்கு உட்பட்டு ஒரு விவகாரத்தை, விஷயத்தை எழுப்பினால் அதுகுறித்து விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து