முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்

செவ்வாய்க்கிழமை, 20 ஜூலை 2021      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன்: இங்கிலாந்தில் கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது அங்கு கொரோனா தொற்று முழுவதுமாக கட்டுப்படுத்தப்படவில்லை. கடந்த வெள்ளி மற்றும் சனியன்று 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து தற்போது புதிய தொற்று பாதிப்பு 48,161 ஆக குறைந்தது. இந்நிலையில், இங்கிலாந்து அரசு ஏற்கனவே அறிவித்தபடி, அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தற்போது தளர்த்தப்பட்டன.

கொரோனா தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகள் முடிவுக்குவருவதாகவும், மக்களுக்கு சுதந்திரமான நாள் என்றும்  பிரதமர் போரிஸ் அறிவித்துள்ளார்.  இதனால், இனி பொதுமக்கள் முககவசம் அணியதேவையில்லை. சமூக இடைவெளியை பின்பற்றும் அவசியமில்லை.  இங்கிலாந்தில் பெரியவர்களில் 88 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து