முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்.30- வரை அவகாசம்: மத்திய இணை அமைச்சர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 20 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.

ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக  நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், 

ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது வரை 92.8 சதவீத ரேசன் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்தாண்டில் தமிழகத்துக்கு ரூ.6,317.64 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.3,993.80 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி தமிழகத்திற்கு ரூ.1,169.38 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.1,276.03 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து