முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் மனைவிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிப்பு

புதன்கிழமை, 21 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பருக்காபாத்: தான் நடத்தும் டிரஸ்ட்டிற்கு முறைகேடாக மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயிஸ் குர்ஷித்திற்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை படேகார்க் மாவட்ட தலைமை நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் மனைவி லூயிஸ், டாக்டர் ஜாக்கீர் ஹூசைன் நினைவு டிரஸ்ட் ஒன்றை நடத்தி வருகிறார். உ.பி.,யின் 17 மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், காதுகேட்கும் கருவி வழங்குவதற்காக, இந்த டிரஸ்டிற்கு மத்திய அரசு ரூ.71.5 லட்சம் நிதி ஒதுக்கியது.

பின்னர் கடந்த 2012ல், இந்த நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது. அதற்காக மாநில அரசின் கையெழுத்து போலியாக போடப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை லூயிஸ் குர்ஷித் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள் மறுத்திருந்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான சாதனங்கள் வழங்குவதற்காக பல முகாம்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்திருந்தது. ஆனால், அவை அனைத்தும் காகிதங்களில் மட்டுமே உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கயாம்கஞ்ச் போலீசார், கடந்த 2017 -ல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 2019 டிசம்பர் 30-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், லூயிஸ் குர்ஷித்திற்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து படேகார்க் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் பிரவீன் குமார் தியாகி உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து