முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி ஜந்தர்மந்தரில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் துவக்கம்

வியாழக்கிழமை, 22 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: டெல்லி சிங்குர் எல்லையில் இருந்து ஜந்தர் மந்தருக்கு போராட்டக் களத்தை விவசாயிகள் மாற்றியுள்ளனர். 

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

கொரோனா காலத்தில் போராட்டம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது இயல்பு நிலை திரும்புவுதால் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். டெல்லியில் பாராளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அவர்கள் அனுமதி கோரினர். ஆனால் கொரோனா பரவல் ஏற்படும் எனக் கூறி டெல்லி போலீசார் மறுத்து விட்டனர். 

இதனையடுத்து டெல்லி சிங்குர் எல்லையில் இருந்து டெல்லி ஜந்தர் மந்தருக்கு போராட்டக் களத்தை விவசாயிகள் மாற்றியுள்ளனர். அங்கிருந்த விவசாயிகள் அனைவரும் பேருந்துகளில் ஜந்தர் மந்தர் வந்து சேர்ந்தனர். பி.கே.எஸ். விவசாய சங்கத் தலைவர் திகைத் தலைமையில் ஜந்தர் மந்தரில் அவர்கள் தங்கள் போராட்டத்தை தொடங்கினர். விவசாயிகள் போராட்டம் தொடங்கியதை அடுத்து அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து