Idhayam Matrimony

ஜீன்ஸ் அணிந்ததற்காக சிறுமியை அடித்து கொன்ற உறவினர்கள்

வியாழக்கிழமை, 22 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அமர்நாத் பஸ்வான். இவருக்கு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் தனது மனைவி, 17 வயது மகளுடன் அங்கு சென்றார்.

லூதியானாவில் சிறிது நாட்கள் தங்கியிருந்த அமர்நாத் பஸ்வானின் மனைவி மற்றும் மகள் சொந்த கிராமத்துக்கு திரும்பினர். அப்போது சிறுமி ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். இதற்கு அவரது தாத்தா, உறவினர் அரவிந்த் அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜீன்ஸ் பேண்டை அணியக் கூடாது. இந்திய உடைகளைதான் அணிய வேண்டும் என கூறினார்கள். அதற்கு சிறுமி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சிறுமியை சுவற்றில் மோதியும், பலமாக தாக்கியும் கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை ஆட்டோவில் தூக்கி சென்று அங்குள்ள மேம்பாலத்துக்கு கீழே வீசியுள்ளனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி சிறுமியை கொன்ற அவரது தாத்தாவையும், உடலை ஏற்றிச் சென்ற ஆட்டோ டிரைவரையும் கைது செய்துள்ளனர். சிறுமியை கொலை செய்த மற்ற உறவினர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து