முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெகாசஸ் உளவு விவகாரம்: பார்லி. வளாகத்தில் எதிர்க்கட்சிகள் தர்ணா

வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நேற்று பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பு எதிர்கட்சி எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இக்கூட்டத் தொடரில் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் பாராளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.  இப்பிரச்சினை குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.  கடந்த 4 நாட்களாக எதிர்க்கட்சிகள் அமளியால் பாராளுமன்றம் முடங்கி உள்ளது.

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நேற்று பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பு எதிர்கட்சி எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணாவில் காங்கிரஸ், தி.மு.க, சிவசேனா எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து