முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வரும் 28-ம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம்: அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசுக்கு எதிராக வரும் 28-ம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படவும், நீட் தேர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம், மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றை தி.மு.க. அரசின் கவனத்திற்குக் கொண்டு வரவும், மெத்தனப் போக்கை களையவும், அக்கறையுடன் மக்கள் குரலுக்கு செவி சாய்க்கச் செய்யவும் வருகிற 28-ம் தேதி அன்று காலை 10 மணியளவில் கட்சியின் உடன் பிறப்புகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில் தங்கள் வீடுகளின் முன்னே பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்பி தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரல்களால் ஒலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கூடி குரல் எழுப்புவோம். அது ஆளுவோரின் செவிப்பறையை சென்று சேரட்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து