முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் படங்கள்தான் எடுத்தார்: என் கணவர் அப்பாவி என்கிறார்: நடிகை ஷில்பா ஷெட்டி

சனிக்கிழமை, 24 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை: பாலியல் ஆசையைத் தூண்டும் நோக்கம் கொண்ட படங்களைத்தான் எடுத்தார். ஆபாச படங்கள் எடுக்கவில்லை எனது கணவர் அப்பாவி என நடிகை ஷில்பா ஷெட்டி கூறி உள்ளார்.

மும்பை மலாடு, மத் ஐலேன்ட் பகுதியில் உள்ள சொகுசு பங்களாவில் ஆபாச படம் எடுத்து அதனை செல்போன் செயலியில் வெளியிட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் போலீசார் நடிகை வந்தனா திவாரியையும் கைது செய்து இருந்தனர். விசாரணையில் இந்த வழக்கில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ்குந்த்ராவுக்கு (வயது45) தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் அவரை கடந்த 19-ம் தேதி அதிரடியாக கைது செய்தனர். அவர் வழக்கில் முக்கிய குற்றவாளி என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜ் குந்த்ராவின் போலீஸ் காவலை வருகிற 27-ம் தேதி வரை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டது. 

இத்கிடையே போலீசார் இந்த வழக்கு தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். வாக்கு மூலத்தில் தனது கணவர் ராஜ் குந்த்ரா நிரபராதி என்று ஷில்பா ஷெட்டி  கூறியுள்ளார்.  மேலும் குந்த்ரா ஆபாச படங்கள்  தயாரிப்பதில் ஈடுபடவில்லை. அவர் ஒரு அப்பாவி என கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து