முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் புதிதாக 39,097 பேருக்கு கொரோனா

சனிக்கிழமை, 24 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: இந்தியாவில் புதிதாக 39 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,097 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,097- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 546-பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 20 ஆயிரத்து 016- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா  தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4,08,977- ஆக உள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து கடந்த  24 மணி நேரத்தில் 35,087- பேர் குணம் அடைந்துள்ளனர்.  கொரோனா தொற்று மீட்பு விகிதம் 97.36 சதவிகிதமாக உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.40 சதவிகிதமாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து