முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணியை வீழ்த்தி இலங்கை ஆறுதல் வெற்றி

சனிக்கிழமை, 24 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

தொடரை வென்றது...

இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.

மழை குறுக்கீடு...

இந்நிலையில், இந்தியா-இலங்கை மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில்  நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. மழை குறுக்கீட்டின் காரணமாக போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அதையடுத்து இரு அணிகளுக்கும் 47 ஓவர்கள் மட்டும் நிர்ணயித்து மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது.

227 ரன்கள் இலக்கு...

அதன்படி,  நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் இந்திய அணி 43.1 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 49 ரன்களும், சஞ்சு சாம்சன் 46 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களும் எடுத்தனர். மீண்டும் மழை குறுக்கிட்டதால் 227 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இலங்கை அணி களமிறங்கியது.

சூர்யகுமார் யாதவ்... 

இறுதியில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது.  இதன்மூலம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என தொடரைக் கைப்பற்றியது.  ஆட்ட நாயகன் விருது அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு அளிக்கப்பட்டது. தொடர் நாயகன் விருது சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி 25ம் தேதி நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து