முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வியாழக்கிழமை, 29 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் இரண்டு நாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக.சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் ஜூலை29, 30ஆம் தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

நாளை (ஜூலை 31ஆம் தேதி) கோவை, நீலகிரி மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்

ஆகஸ்ட் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும். 

சென்னையை பொறுத்த வரைஅடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, புதுக்கோட்டை, தேனி மாவட்டம் பெரியாறு, சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை, நீலகிரி மாவட்டம் தேவாலா, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் தலா 2 செ.மீ.,கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை மற்றும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தலா 1 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து