முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாபில் நாளை முதல் பள்ளிகள் திறக்க உத்தரவு

சனிக்கிழமை, 31 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

சண்டிகர் : பஞ்சாபில் நாளை ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க அந்த மாநில அரசு அனுமதியளித்துள்ளது. 

பஞ்சாபில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவது குறித்து வெளியான அரசு அறிவிப்பில்,  கொரோனா பரவலைத் தடுக்க பஞ்சாபில் கடந்த 20-ம் தேதி அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

நாளை 2-ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது. பள்ளி கல்வித் துறை வெளியிடும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை மாவட்ட அதிகாரிகள் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து