முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய, சீனா அதிகாரிகள் இடையே 12-வது சுற்று பேச்சுவார்த்தை

சனிக்கிழமை, 31 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியா மற்றும் சீனா இடையிலான பேச்சுவார்த்தை மூன்றரை மாத இடைவெளிக்கு பின்னர் நடைபெற்றது. 

இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையே கிழக்கு லடாக் எல்லையில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மோதல் போக்கு நிலவி வந்தது. இதையடுத்து, இரு தரப்பும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இரு தரப்பு படைகள் திரும்பப் பெறப்பட்டன. மேலும் இரு தரப்பிலும் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 12-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று  காலை அசல் கட்டுப்பாட்டு கோட்டின் சீன பகுதியில் மால்டோ எல்லை முனையில் நடந்தது. எல்லையில் ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா பகுதிகளில் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தையின் போது இடம்பெற்றதாக  ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து