எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தி.மு.க. ஆட்சியின் 100 நாள் சாதனை குறித்து கேட்ட போது அமைச்சர் துரைமுருகன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
பேட்டி விபரம் வருமாறு
கேள்வி:- மேகதாது விவகாரம் தொடர்பாக யார் போராட்டம் நடத்தினாலும் கவலை இல்லை என, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளாரே?
பதில்:- வந்த வேகத்தில் அப்படித்தான் சொல்வார்கள். தீர்ப்பாயம் உத்தரவையும் மதிக்க மாட்டோம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்க மாட்டோம் என்று ஒரு மாநில முதல்வர் சொல்வது ஏற்புடையது அல்ல. அவர் மரியாதைக்குரியவர். அவருடைய தந்தை பொம்மை, எங்கள் தலைவர் கருணாநிதியின் மீது அன்பு கொண்டவர். அவர் தொடுத்த வழக்கு ஒன்றுதான் மாநில உரிமைகளை இன்று வரை காத்துக் கொண்டிருக்கிறது. சட்டப்பேரவைகளைக் கலைக்க முடியாது என்ற அரசியலமைப்பு உத்தரவாதத்தை ஏற்படுத்தியவர் அவரின் தந்தை பொம்மை. எனவே, கர்நாடக முதல்வர் இளம் துடிப்புடன் பேசியிருக்கிறார். விவரம் தெரிந்தபிறகு அவரே அதனைக் கைவிடுவார் என நான் நம்புகிறேன்.
கேள்வி:- மார்க்கண்டேய அணை விவகாரம் தொடர்பாக நடுவர் மன்றம் அமைப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறதா?
பதில்:- அணை கட்டியவுடனேயே முந்தைய அரசு, கர்நாடக அரசுக்குக் கடிதம் எழுதியது. அதனைக் கேட்காததால், அந்த அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. கட்டும்போதே உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தால், அணை கட்டுமானம் நின்றிருக்கும். ஆனால், தடை விதிக்காமல் இவ்விவகாரத்துக்கு நடுவர் மன்றம் அமைத்துக்கொள்ளுங்கள் என உச்ச நீதிமன்றம் சொன்னது. நடுவர் மன்றம் அமையுங்கள் எனக் கேட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இதுவரையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
நான் மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சரைச் சந்தித்தபோது, உங்களுக்கு என்ன குறைபாடு, உச்ச நீதிமன்றம் சொல்வதை நீங்களே கேட்காவிட்டால் நாங்கள் என்ன செய்வது? தீர்ப்பாயம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஏன் அமைக்கவில்லை எனக் கேட்டேன். அப்படித்தான் பல விவகாரங்கள் மத்திய அரசிடம் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
கேள்வி:- திமுக ஆட்சி 100 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உங்களின் சாதனையாக எதனைச் சொல்வீர்கள்?
பதில்:- கொரோனாவைக் கட்டுப்படுத்துவதுதான் எங்களின் சாதனை. அதன் தொப்புள்கொடியை அறுக்க, தமிழக முதல்வர் 24 மணி நேரம் முயற்சி எடுத்து, எல்லோருடைய பாராட்டையும் பெறும் அளவுக்கு, அதனைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் சற்று வெற்றி பெற்றிருக்கிறார். இதனையே நாங்கள் 100 நாட்களின் சாதனையாகக் கருதுகிறோம். மற்ற சாதனையைவிட உயிர் காக்கும் சாதனைதான் உயர்ந்தது.
கேள்வி:- பா.ஜ.க. எதிரும் புதிருமாக இருந்தாலும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டாரே?
பதில்:- அந்த நல்ல உள்ளத்தை வரவேற்கிறேன்.
கேள்வி- மேகதாது விவகாரம் தொடர்பாக, கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளாரே?
பதில்:- அரசாங்கம் பேசியே ஒன்றும் நடக்கவில்லை. அவருடைய ஆர்வத்துக்கு உழைப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
கேள்வி:- காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதே?
பதில்:- நாம் என்ன செய்தாலும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இன்னும் அத்திட்டம் விரிவான திட்ட அறிக்கையுடனேயே நின்று போயிருக்கிறது. பக்கத்தில் இருக்கும் தண்ணீரை எடுக்கவே விட மாட்டார்கள். கிருஷ்ணா நதி நீரை வரவழைப்பதற்கு பட்டபாடு எனக்குத் தெரியும். கோதாவரியை பாடுபட்டுக் கொண்டுவந்தோம்.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.