முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் 22-ம் தேதி 2-வது கருட சேவை நிகழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் கருட சேவை நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதை தொடர்ந்து வரும் 22-ம் தேதி 2-வது கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் 2 கருட சேவை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முதல் கருட சேவை நிகழ்ச்சி நேற்று  (வெள்ளிக்கிழமை) கருட பஞ்சமியையொட்டி கோவிலின் நான்கு மாடவீதிகளில் நடந்தது.  இந்த நிகழ்ச்சியில் மலையப்பசாமி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

அதைத் தொடர்ந்து 2-வது கருட சேவை நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமியையொட்டி வருகிற 22-ம் தேதி நடக்கிறது. கருட சேவை நிகழ்ச்சியில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து