முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிபா வைரஸ் காய்ச்சலுக்கு கேரளாவில் சிறுவன் பலி

ஞாயிற்றுக்கிழமை, 5 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கேரளாவின் கோழிக்கோட்டில் தனியார் மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுவனுக்கு நிபா வைரஸுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கடந்த 2018 - 2019ஆம் ஆண்டுகளில் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரா மாவட்டங்களில் பரவிய நிபா வைரசுக்கு 17 பேர் உயிரிழந்தனர். கொரோனாவின் பிடியில் இருந்து கேரளா மீளமுடியாமல் தவிக்கும் நிலையில் மீண்டும் அங்கு நிபா வைரஸ் அச்சுறுத்தல் எழுந்துள்ளது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து