முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு

புதன்கிழமை, 15 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 9 மாவட்டங்களுக்கு நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் பணிகள், கூட்டணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. 

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் நேற்று அறிவித்துள்ளார். 

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று 16 மற்றும் நாளை 17 ஆகிய தேதிகளில் விருப்ப மனு பெற்று பூத்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருக்கு ரூ.4 ஆயிரம், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினருக்கு ரூ.2 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து