முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை. : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், தமிழகத்தில் நாளை 19ந் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதன்படி அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் 19-ந் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும்.  வரும் 20-ந் தேதி தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அதேபோல் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து