முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனரக வாகன ஓட்டுநர்களுக்கு பணி நேர வரம்பு நிர்ணயிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் கட்காரி வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 21 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில், கனரக வாகன ஓட்டுநர்களுக்கும்  வாகனங்களை இயக்க குறிப்பிட நேர வரம்பு நிர்ணையிக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக நிதின் கட்காரி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது;- 

களைப்பு மற்றும் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக  டிரக் ஓட்டுநர்களுக்கும் விமானிகளைப் போன்று  வாகனங்களை இயக்குவதற்கான நேர வரம்பு நிர்ணயிக்க வேண்டும்.  வணிக வாகனங்களில் ஓட்டுநர்கள்  தூங்குவதை கண்டறியும் சென்சார்கள் அமைப்பதற்கான கொள்கைகளை சேர்க்கும் பணிகளை துவங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டங்கள் தவறாமல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கும் மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து