முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பு குறைந்ததால் அனைத்து எல்லைகளையும் திறந்த நேபாளம்

வியாழக்கிழமை, 23 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

நேபாள நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் அனைத்து எல்லைகளையும் அந்நாடு திறந்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கொரோனா 2-வது அலையின் தீவிரத்தால் அனைத்து எல்லை நுழைவுவழிகளையும் கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி அந்நாட்டு அரசு மூடியது. 

தற்போது அந்நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால், அனைத்து நுழைவுவழிகளையும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட, கொரோனா தொற்று சோதனையில் ‘நெகட்டிவ்’ சான்றிதழ் பெற்ற வெளிநாட்டவர்கள் அனைவரும் நேபாளத்துக்கு வரலாம் என்று அந்நாட்டு சுகாதாரம் மற்றும் மக்கள்தொகை மந்திரி உமேஷ் ஷிரேஸ்தா கூறினார். 

 

கொரோனாவால் தேக்கம் அடைந்துள்ள சுற்றுலாத் துறைக்கு ஊக்கம் அளிக்கும்வகையில் இந்த முடிவை நேபாள அரசு எடுத்துள்ளது. நேபாளத்துக்கு இந்தியாவுடன் 35 எல்லை நுழைவுவழிகளும், சீனாவுடன் 2 நுழைவுவழிகளும் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து