முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடுவன் - விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 24 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

கனவனுக்கு துரோகம் மனைவி. எதிரியாய் மாறும் நண்பன். கொள்ளையடிக்க நினைக்கும் உறவு. இந்த மூன்றுக்கும் நடுவில் சிக்கும் ஒருவனின் கதைதான் நடுவன் படக்கதை. 

எல்லோருக்கும் ஒரு முகமூடி இருக்கிறது அதை கழட்டி விட்டு பார்த்தால்,  அனைவருமே அகோரமாகதான் தெரிவார்கள். இங்கு யாருமே உத்தமன் இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் பச்சோந்தி கூட்டம்தான்  என சொல்கிறது இப்படம். ஒரு மலை உச்சியான பனிபடலம் சூழுந்துள்ள ஒரு சிற்றூரின் பின்னணியில் கதை நடக்கிறது. காட்சிகள் பார்க்க அழகாக இருக்கிறது. படத்தின் தொடக்கமே ஒரு பெரிய சஸ்பென்சாக தொடங்குகிறது. ஆரம்ப காட்சிகளில் மிக அழகாக தெரிகிறார் பரத்.

நாயாகி அபர்ணா, கோகுல், ஆனந்த் ஆகியோரின் நடிப்புகளுக்கு பாராட்டுக்கள். ஒரு வீடு, ஒரு ஃபேக்ட்ரி, காடு இவற்றை மட்டும் வைத்து  சிறிய பட்ஜெட்டில் பிசிறு இல்லாமல் நேர்த்தியாக படம் கொடுத்த இயக்குனர் சரண் குமாருக்கு வாழ்த்துக்கள். மொத்தத்தில் படம் ஆஹா ஓஹோ என சொல்லா விட்டாலும் ஓகே சொல்லலாம் இந்த நடுவனுக்கு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து