முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் பலி

திங்கட்கிழமை, 27 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

ஜெருசலேம்: மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில் ஐந்து பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அதன்போது இறந்த ஐவரும் ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்கள் என்றும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவிக்கிறது. பாலத்தீன தரப்பிலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தங்கள் நாட்டு ராணுவத்தினர் இருவருக்கும் தீவிர காயம் ஏற்பட்டுள்ளது என்றும் இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.

தங்கள் உறுப்பினர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஹமாஸ் அமைப்பு பதிலடி கொடுப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. பர்குய்ன் எனும் பகுதியில் இருவரும் ஜெருசலேம் அருகே உள்ள பித்து எனும் இடத்தில் மூவரும் கொல்லப்பட்டுள்ளதாக பாலத்தீன் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து