முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது புகார்: சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

செவ்வாய்க்கிழமை, 28 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

ரியல் எஸ்டேட் நிறுவனம் வட்டிக்குப் பணம் கொடுத்து நிலங்கள் அபகரித்ததாக எழுந்த புகாரை அடுத்து சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனையில் ஈடுபட்டனர்.

வட்டிக்குப் பணம் கொடுத்து நிலங்களை அபகரித்ததாகவும்,  சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாகவும் சென்னை ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது மத்திய அமலாக்கத்துறையினரிடம் 10க்கு மேற்பட்டோர் புகார்  அளித்தனர்.  

 

அதன் அடிப்படையில், சென்னையில் அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான வேப்பேரி, எழும்பூர், என்.எஸ்.சி.போஸ் சாலை உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறையின் அதிகாரிகள் நேற்று காலை முதல் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். மத்திய ரிசர்வ் படை  மற்றும் துப்பாக்கி  ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து