முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலநிலை மாற்றம் புதிய நோய், அழிவுகளை கொண்டு வருகிறது: 35 பயிர்களை அறிமுகம் செய்து பிரதமர் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 28 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

‘காலநிலை மாற்றமே புதிய நோய்களையும் அழிவுகளையும் கொண்டு வருகிறது’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சிறப்பு பண்புகளுடன் கூடிய 35 பயிர் வகைகளை நேற்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். விவசாயிகளுக்கு பலன் அளிக்கக் கூடிய இத்திட்டம் மத்திய மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் மூலமாக  அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், ராய்ப்பூரில் தேசிய உயிரியல் அழுத்த சகிப்புத்தன்மை நிறுவனத்துக்கு புதிதாக கட்டப்பட்ட வளாகத்தையும் பிரதமர் நேற்று நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

 

இந்நிகழ்ச்சியில், வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு பசுமை வளாக விருதை வழங்கி, புதுமையான முறைகளைப் பயன்படுத்தும் விவசாயிகளுடன் பிரதமர்  மோடி உரையாடினார். அப்போது பேசிய அவர், ‘காலநிலை மாற்றமே புதிய நோய்களையும் அழிவுகளையும் கொண்டு வருகிறது. மனிதர்களை மட்டுமல்லாமல் கால்நடைகளையும் , பயிர்களையும் பெரிதும் பாதிக்கிறது. இந்தப் பருவநிலை மாற்றத்தை தடுக்கும் வகையில் ஆய்வுகள் தேவை’ எனத் தெரிவித்தார். மேலும் அறிவியல் ,அரசு மற்றும்  சமுதாயம் மூன்றும் இணைந்தால்  மிகச் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் தன் உரையில் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து