முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணை நீர் மட்டம் 73.67 அடியாக உயர்வு

செவ்வாய்க்கிழமை, 28 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

மேட்டூர் அணை நீர் திறப்பு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று முன்தினம் விநாடிக்கு 7 ஆயிரத்து 50 கன அடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து விநாடிக்கு 9,875 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி வரை டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதமும், மேட்டூர் அணை கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 800 கன அடி வீதமும் நீர் திறக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழை குறைந்துள்ளதால், அங்கு பாசனத்துக்கு நீர் தேவை அதிகரித்துள்ளது. எனவே, நேற்று காலை 9 மணி முதல் டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.49 அடியாக இருந்த நிலையில், நேற்று அணையின் நீர் மட்டம். 73.67 அடியாக உயர்ந்துள்ளது.

 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,051 கன அடியிலிருந்து 7,000 கன அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7,000 கன அடி நீரும் கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 35.93 டி.எம்.சி.யாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து